நெருக்கம் – இறுதி பகுதி

எங்கள் இருவருக்குள்ளும் அன்பு மலர்ந்தது, உண்மையான கணவன் மனைவி போலவே ஆனோம். என் அக்கா வீட்டில் இல்லாத போது இருவரும் வீட்டில் இருந்து வேலை செய்வோம், அப்போது கணவன் மனைவியாகவே இருப்போம். சில காலங்களில் வெளியூர் செல்லுவோம் அப்போதும் கணவன் மனைவியாகவே மாறுவோம். இப்படி சில மாதங்கள் கடந்து சென்றது. என் அக்கா கருவத்தறிருந்தாள். ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது, அவளுக்கு வனிதா என பெயர் வைத்தார்கள்.

அவள் பார்க்க என் அத்தானை போலவே இருந்தால். ஏனோ என் அத்தானை போலவே இருந்ததால் எனக்கு அவள் மீது தனி பாசம். அவளும் என்னிடம் ஒட்டி கொண்டாள். அவளுக்கு என் மீது தனி ஈர்ப்பு. ஒரு முறையில் அவளின் தாய் மாமன் நான். ஆனால் உண்மையில் அவளுடைய சித்தி நான். ஆம் அவளின் தந்தையின் இரண்டாம் தாரம் அவளுக்கு சித்தி தானே. ஆனால் அவளை நான் என் அக்காவின் குழந்தை என்று நினைக்க வில்லை. என்னுடைய குழந்தையாகவே பாவித்தேன்.

குழந்தையும் லேசு பட்டவள் இல்லை. நான் காட்டும் அன்பை இரட்டீப்பாக காட்டினாள். அவள் தான் தாயிடம் இருப்பதை விட என்னிடம் அதிக காலம் செலவிட்டால். எங்கள் வாழ்க்கை வஸந்தமாக சென்றது. இரண்டு ஆண்டுகள் கழித்து எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. என்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கெட்டு விட கூடாது என முடிவு செய்தேன். என் மனம் முழுமையாக என் செந்தில் மாமா தான் இருக்கிறார். நான் உடல் அளவில் தான் ஆண், மனதளவில் பெண்ணாக மாறினேன். இன்னொரு பெண்ணிடம் வாழ என் மனம் சம்மதிக்கவில்லை. அவளிடம் சொல்லலாம் என்றாள் மனத்தில் தைரியம் இல்லை.

என் அக்கா விடம் சொல்லலாம் என நானும் என் அத்தானும் முடிவு செய்தோம். அக்காவினால் இதனை தாங்கி கொள்ள முடியவில்லை. இதையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தான் உயிரைவிட்டால். ஆனால் இறக்கும் முன்பு எனக்கும் என் மாமாவுக்கும் இருந்த நெருக்கத்தை ஒரு கடிதத்தில் எழுதி வைத்தாள். மேலும் என் கணவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அது என் தம்பி கார்த்திகை தான். இல்லை கார்த்திகவை தான் அவளால் மட்டும் தான் என் குழந்தைக்கு உரிய தாய் அன்பு கிடைக்கும், இதுவே என் இறுதி ஆசை என எழுதினாள். என் கண்கள் கலங்கின. என் மாமா என்னை ஏற்று கொண்டார்.

எங்கள் வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என முடிவு செய்தோம். நாங்கள் இருவரும் குழந்தையை எடுத்து கொண்டு வேற ஊருக்கு ஓடி விட்டோம். நான் ஒரு சிறந்த இல்லாததரசியாகவும் தாயாகவும் இருந்தேன். நான் என் குழந்தைக்கு மட்டும் தாயாக இல்லை, என் மாமாவுக்கும் தான். அவர் என் அக்காவை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம், நான் அவருக்கு தாயாக மாறினேன். மற்ற நேரங்களில் மனைவியாக மாறினேன். எனக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடித்து இருந்தது. என் குழந்தைக்கு நான் அவள் தாய் மாமன் என்று தெரியவில்லை, தாய் என்றே நினைத்து கொண்டு இருந்தால். இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்தது. நான் என் மாமா குழந்தை, திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம். என் மாமாவுடன் ஆன நெருக்கம் என்னை இந்த அளவில் கொண்டு சென்று நிறத்தும் என்று கடுகு அளவு கூட நினைக்கவில்லை. எது எப்படியாயினும் வாழ்வு சந்தோஷமாக இருந்தது, என் அக்கா என்னை நிச்சயமாக மன்னித்து இருப்பாள் என தோன்றியது. 

முற்றம்.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close