புன்னகை குடும்பம் – 3

என் மனைவி என்னிடம், இந்த நிமிடம் முதல் நீ மனைவி நான் கணவன் என்றாள். மேலும், என் வேட்டி சட்டையை அணிந்து கொண்டாள். எனக்கு அல்லு விட்டது. என்னடா இது எனக்கு வந்த சோதனை என எண்ணி கொண்டு வீடு வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். முதலில் பாத்திரம் கழுவ தொடங்கினேன். கொஞ்ச நேரத்தில் வியர்க்க ஆரம்பித்தது. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை, இருந்தாலும் நமக்கு பந்தயம் தான் முக்கியம், நம் தோல்வியை மனைவியிடம் ஒப்பு கொண்டால் நமக்கு இந்த வீட்டில் உண்டான மரியாதை கெட்டு விடும்.

எனவே இன்று ஒரு நாள் கூத்தாக நான் இதை செய்து விடலாம் என்று நினைத்தேன். எல்லாமே அவன் செயல். முதலில் எனக்கு வெறுப்பாக இருந்தது, என்னடா இது ப்ரா பாண்டி,பாவாடை,கொலுசு, கம்மல், வளையல் என எவ்வளவு தான் அணிவது, இதில் பாதி அணிகலங்களை ஆண்களுக்கு வைத்து இருக்கலாம், பெண்களை என் இவ்ளோ சிரமம் மேற்கொள்ள வைக்க வேண்டுமென யோசிக்க தொடங்கினேன். ஆனால் சிறிது நேரத்தில் அருமையான உணர்வு ஏற்பட்டது, அப்படி பட்டது தான் இந்த புடவை போன்ற ஆடைகளின் அருமை என எனக்கு அது வரை தெரியவில்லை.

அவள் செய்து இருந்தால், பாத்திரங்களை ஒரு மணி நேரத்தில் முடித்து இருப்பாள், நான் ஒன்றரை மணி நேரம் எடுத்து விட்டேன். பின்னர் வீட்டை பெருக்கி துடைக்க வேண்டும் என்றாள். இப்போதும் ஒன்றும் கெட்டு போகவில்லை, நீங்கள் உங்கள் தோல்வியை ஒப்பு கொண்டீர்கள் என்றாள், நான் இதோடு விட்டு விடுகிறேன் என்றாள் என் மனைவி, நான் ஒப்புக்கொள்ள வில்லை. மனம் போதும் தோல்வியை ஒப்பு கொண்டு விடு என்றது, ஆனால் உடல் புடவையின் சுகத்தை விட மனது இல்லை, அதனால் இந்த கடினமான வேலைகளை செய்ய சம்மதித்தது.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close