
என் பெயர் கேஷவ். நான் கல்லூரியில் படித்து வருகிறேன். அன்று எனக்கு விடுமுறை. வீட்டில் உக்காந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருந்தேன். மாலை ஐந்து மணி ஆனது. என்ன செய்வது என்றே தெரிய வில்லை. எனக்கு புடிக்காத படம் ஒன்றை பார்த்து கொண்டு இருந்தேன். அதனை அனைத்து விட்டு மேல் மாடிக்கு சென்றேன். அங்கே இணைய தளம் இருந்தது. கணினி மூலமாக இனியத்தில் பொழுது களித்தேன். பல விசயங்களை தேடினேன். அப்போது என் கண்ணில் மாற்றாடை (crossdressing) பற்றி கண்ணில் பட்டது. அது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிக ரித்தது. என் கண்ணில் ஒரு பெண் புகை படம் பட்டது. அவளை பற்றி தேட தொடங்கினேன். அவளை போல பலரும் இருப்பதை கண்டு வியந்திதேன். அவர்கள் அனுபவங்களை படித்து தெரிந்து கொண்டேன். பெண் உடை அணிவது அவர்களை வெகுவாக கவர்ந்தது என்று சொல்லி இருந்தனர். அவற்றை படித்து கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரிய வில்லை. மணி ஒன்பது ஆனது.என் அம்மா என்னை இரவு உணவு சாப்பிட அழைத்தார். எனக்கு இவர்களை பற்றி படிப்பதில் ஆர்வம் அதிகரித்தது. ஆனாலும் அம்மா சொல்லுக்கு கட்டு பட்டு வேறு வழி இல்லாமல் சாப்பிட சென்றேன். சாப்பிட்டு வந்து இதை தொடரலாம் என எண்ணினேன். அனைவரும் உறங்க சென்றனர் நான் மட்டும் மாடிக்கு சென்றேன். அப்போது மணி பதினொன்று இருக்கும். தூக்கம் வர வில்லை. இந்த தேடல் மிகவும் முக்கியமானதாக இருந்தது. இந்த தேடல் என் வாழ்க்கையை மாற்றும் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை.