
என்னதான் எனக்கு பெண்ணாக வாழும் ஆசை இருந்தாலும். என்னால் முழுமையாக பெண்ணாக நடந்து கொள்ள முடியாது. மேலும் இன்னொருவர் வீட்டில் இப்படி இருப்பது சரி பட்டு வராது என முடிவு செய்தேன். என்னை மன்னிக்கவும் என்றும் இந்த விசயத்தால் நாம் நட்பு பாதிக்க பட கூடாது என அவரிடம் கேட்டு கொண்டேன். அவர் மிகவும் உண்மையான மனிதன். இதனால் நாம் நட்பு பாதிக்க படாது என உறுதி அளித்தார், ஆனால் என்னை இன்னும் ஒரு முறை ஆலோசனை செய்ய சொன்னார். சரி தங்களுக்காக வீட்டுக்கு சென்று ஒரு முறை ஆலோசனை செய்வதாக உறுதி அளித்தேன்.
சரி மா ஆனந்தி என்றார். ஸாரீ ஆனந்த் வாய் தவறி ஆனந்தி என வந்து விட்டது, நீ என் மனைவியாக நடிக்க ஒப்புக்கொண்டால் உனக்கு ஆனந்தி என பெயர் சூடடலாம் என் இருந்தேன். பார்க்கலாம் நீ ஒப்புக்கொண்டால் ஆனந்தி, ஒப்புக்கொள்ள வில்லை என்றால் ஆனந்த் தான் என்றார். அன்று இரவு சரியான உறக்கம் இல்லை. கனவில் அவர் வந்து என்னை ஆனந்தி என அழைப்பது போலவே இருந்தது. மேலும் என் மனசாட்சி என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. உன் மனத்தில் நீ என்ன தான் நினைத்து கொண்டு இருக்கிறாய். ஒரு பெண்ணாக வாழ வேண்டும் என எத்தனை நாட்கள் கனவு கண்டாய், ஆனால் இப்போது சந்தர்ப்பம் வரும் போது இப்படி வீணாக தவிர்ப்பது ஞாயமா என கேட்டது.
மேலும் சின்ன சின்ன வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் செய்த நீ இப்படி வரும் மாபெரும் வாய்ப்பை தவற விடுவது மிக பெரிய முட்டாள் தனம். இந்த வாய்ப்பை இழந்து விட்டு பின்னர் ஒரு வாய்ப்பு கிடைக்க வில்லை என தவிப்பது தவறு ஆனது என தோன்றியது. ஆனால் எவ்வளவு நாள் இந்த வேஷம் என்பது தெரியவில்லை. மேலும் நான் பெண்ணாக நடிக்கும் போது ஏதாவது தவறு செய்து மட்டிக்கொண்டாள் என்ன செய்வது என யோசித்தேன். அவருக்கு நான் நடிக்க தயார் ஆனால் நிறைய காரணங்கள் என்னை தடுக்கிறது. முதலில் என்னால் நிறைய நேரம் பெண்ணாக நடிக்க முடியாது, என்னால் நீங்கள் மாட்டிக்கொள்ள கூடாது என்று தான் நான் பயம் கொண்டுள்ளேன். மற்ற படி நீங்கள் செய்த உதவிக்கு நான் என்ன கைமாரு வேண்டும் ஆனாலும் செய்யலாம்.
இதெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டும் என எண்ணினேன். ஏதோ ஒன்று என்னை தடுத்தது. பெண்ணாடி நீ என்று என்னை கிழித்தது. மிகவும் குழப்பம் ஆனா சூழல். இந்த இக்கட்டான நிலமை யாருக்கும் வர கூடாது என நினைத்தேன். என்னுடைய பழைய புகைப்படங்களாயும், காணொலி கலையும் பார்த்தேன், இதில் செய்வது போல செய்தால் போதும். இவற்றில் வரும் விசயங்களை, சில நிமிடங்களுக்கு பதில் சில நாட்கள் செய்ய வேண்டும் அவ்வளவு தானே. சரி ஆனந்தி, நாம் இதை அவருக்கு செய்யும் கைமராக செய்யலாம். கடவுள் மீது பாரத்தை போட்டு அவரிடம் ஒப்புதல் அளிப்பதாக கூறினேன். அவர் மிகுந்த ஆனந்தம் அடைந்தார், ஆம் ஆனந்தி கூறிய ஒரு வார்த்தையினால் ஆனந்தம் அடைந்தார். என்னை உடனடியாக கிளம்பி வர சொன்னார்.
ஆனால் எனக்கு ஆகும் செலவுகளை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்றேன். நான் ஆணாக இருக்கும் போது எனக்கு பெரிய ஆசைகள் ஒன்றும் இல்லை. ஆனால் பெண்ணாக மாறும் பொழுது, ஆடைகள், அலங்காரங்கள், நகைகள் என பல செலவுகள் இருக்கும், உங்களை நினைத்தால் பாவாமாக உள்ளது என்றாள் ஆனந்தி. அதை குறித்து நீ கவலை கொள்ளாதே, என் நண்பனின் ஆடை அங்காடி உள்ளது, அதில் இருந்து பல்வேறு துணிகள் கிடைக்கும் இந்த நாடகம் முடிந்த உடன் நாம் இந்த ஆடைகளையும் அலங்காரங்களையும் திரும்ப ஒப்படைததால் போதும். எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் கொண்டு வந்த ஆடைகளை பார்த்து வியந்தே போனேன். ஒரு ஆடையை அணிந்து கொள்ளவா என கேட்டேன். ஆடை அலங்காரம், நகைகள் எல்லா வற்றையும் அணிந்து அவர் முன் நின்றேன். புகைப்படத்தை விட நிஜத்தில் இன்னும் அழகான பெண்ணை போல இருக்கிறாய். நீ ஆண் என்று சொன்னாள் யாருமே நம்ப மாட்டார்கள் என்றார்.