
எனக்கு இந்த இன்னல்களை யாரிடம் பகிர்ந்து கொள்வது என தெரியவில்லை. நான் முகநூலில் ஹாரிணி ஸ்வீடீ என்ற ஒரு கணக்கை தொடங்கினேன். எனக்கு சின்ன வயதில் இருந்தே ஹாரிணி என மற்றவர்கள் அழைக்க வேண்டுமென ஆவலாக இருக்கும். என் அம்மா நான் தப்பு செய்து விட்டால், ஹரி நீ செய்வது கொஞ்சம் கூட சரி இல்லை என்பார், என் காதில் ஹாரிணி செய்வது சரி இல்லை என்று கேட்கும்.
அப்போது முதல் யாராவது என்னை ஹாரிணி என்று அழைக்க மாட்டார்களா என மனம் ஏங்கும் அதற்காகவே என் பெயரை ஹாரிணி என்று வைத்து கொண்டு முகநூல் கணக்கை தொடங்கினேன். எந்த பயனும் இல்லை, வழக்கம் போல ஆண்கள் தங்கள் இச்சையை தீர்ப்பதற்காகவும், மற்றதையி என் மீது நம்பிக்கை இல்லாமலும் இருந்தனர்,என்னதான் இந்த பொழப்பு பேசாமல் இந்த எண்ணத்தை இப்படியே விட்டு விடலாம் என தோன்றியது. என்ன கொடுமை சரவணன் இது, என்பது போல ஆனது என் நிலமை. என் நிலமை யாருகக்கும் வர கூடாது என கடவுளிடம் வேண்டினேன்.
எனக்கு பலர் தேவை இல்லை, என் ஆசையை புரிந்த கொள்ள ஒரு நல்ல உள்ளம் போதும் என தோன்றியது. நான் பெண் உடை உடுத்த எனக்கு பாதுகாப்பாகவும், எனக்கு நல்ல தோழன் ஆகவோ, தோழியாகவோ இருந்தால் போதும். நான் அவர்களிடம் வேற எதுவும் எதிர் பக்க வில்லை. ஆனால் பல முறை இந்த முயற்சியில் தோல்வி பெற்றேன். பலர் என் கைபேசி எண்ணை கேட்டனர், சிலர் என் புகைப்படத்தை கேட்டனர்.
எனக்கு மற்றதையி அணியும் போது, புகைப்படம் எடுக்க வேண்டுமென தோன்றவே இல்லை, ஆனால் தெரியாத ஒருவரிடம் எப்படி என் புகைப்படத்தை பகிர்வது ? அவர் அதை தப்பாக பயன்படுத்தி விட்டால் என் வாழ்க்கை அல்லவா கெட்டு விடும். இன்னும் இரண்டு மூன்று நாள் பார்க்கலாம் அப்படி யாரும் வரவில்லை என்றாள் என்னை இசைக்கு அழைக்கும் ஆண்களிடமே சென்று விடலாம் என தோன்றியது, அவனிடம் நான் பெண்ணாக உடை உடுத்த உதவ முடியும் என தோன்றியது. என் மனது அழைப்பாய தொடங்கியது. இனி எவ்வாறு கட்டு படுத்து வது என தெரிய வில்லை.