அலைபாயும் மனது – 5

ஆஹா இவருக்கு என்ன ஆச்சு, இவரு மற்ற ஆண்கள் மாதிரி தானா, தன்னுடைய இச்சயை நீக்குவதற்காக தான் அழைத்தாரோ என்ற சந்தேகம் எழுந்தது, ஆனால் இவர் மற்றவர்களில் இருந்து வேறுபாடு கொண்டவர். என்னை கட்டில் அறையில் விட்ட பின், அவர் மனைவியின் ஆலமாரியை காண்பித்தார். இதில் என்னென்ன உடைகளெல்லாம் பிடித்து இருக்கிறதோ அவைகள் எல்லாம் உனக்கு உடுத்தி கொள்ள தான். உனக்கு மிகவும் பிடித்த ஆடைகளை அணிந்து கொண்டு, தலையில் நீண்ட ஸவரி முடியை அணிந்து கொண்டு, சிறிது அலங்காரம் செய்து கொண்டு வரவும் என்றார்.

எனக்கு என்ன புடவை அணிவது என்று மிகுந்த குழப்பமாக இருந்தது. காரணம், எனக்கு எல்லா அடைகளும் பிடித்து இருந்தது. எதை எடுப்பது, எதை விடுப்பது என்றே தெரியவில்லை. ஒரு வழியாக மிகுந்த சிரமம் கொண்டு ஊதா நிற புடவையும் ஜாக்கெட் ஐயும் தேர்வு செய்தேன். ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஜாக்கெட் எனக்கென்று அளவு எடுத்து . செய்ததை போலவே இருந்தது. எப்படி அவரின் மனைவியின் அளவும் என்னுடைய அளவும் ஒத்து சென்றது என யோசித்தேன். அதற்குள் அவர் கதவை தட்டி இன்னுமா ட்ரெஸ் செய்கிறாய், நான் வேண்டுமானால் உதவட்டுமா என கேட்டார். நான் தேவை இல்லை என்றேன்.

ஒரு வழியாக முக்கால் மணி நேரத்திற்கு பிறகு நான் கட்டில் அறையை விட்டு வெளியே வந்தேன். அவர் என்னை பார்த்து உனக்கு இந்த பெண் உடைகள் எப்படி இருக்குமென குழம்பினேன். ஆனால் இந்த உடைகளில் நீ நாட்டு கட்டையை போலவே உள்ளாய். எனக்கு கோபம் பீறிட்டு எழுந்தது. அவர் சும்மா நகைச்சுவைக்காக சொன்னதாகவும், தப்பாக எண்ணி கொள்ளவேண்டாம் எனவும் கூறினார். 

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close